Category: Story

Story

The Omnipotent [Tamil]

அவள் உபெரை விட்டு வெளியே வந்தவுடன், மது கேரியரைப் தோளில் வைத்தபடி,   கைகளைக் கட்டிக்கொண்டு ஒரு மனிதர் நிற்பதை அவள் கவனித்தாள். “அப்படியானால், இவர் தான் ...
Storyகதை

தாந்தோவின் மாய வனம்

முடிவு பெறாத இந்தப் பாலத்தின் நுனியில் நின்றபடி யோசித்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு யோசித்தாலும் இங்கே எப்படி வந்தேன், இது எந்த இடம் என்பது பிடிபடவில்லை. ஒரு கனவின்...
filmrajinirajnirasiganStorytamilதமிழ்

ரஜினி எனும் மாயோன் – 2 -அடிபட்ட சிங்கத்தின் கர்ஜனை

  முதல் பாகத்திற்கு இங்கே செல்லவும் –> ரஜினி எனும் மாயோன் – 1     ஒரு வாலிபன் தோல்வி கண்டால் ஒன்று அவன் உத்வேகம்...
Storytamilதமிழ்

ஏழாவது குப்பை தொட்டி

அடுத்த  வேளை சாப்பாட்டுக்கு சிங்கி தான் என்பது ரவிக்கு புரிந்து  விட்டது . சுதா  ஹோட்டலில் இருந்து விழும்  எச்சில் இலைகளுக்கு பக்கத்தில், இடம் போட்டு படுத்தே விட்டான் கோபி. கால் மணி நேர தாமதத்தால் அம்மா உணவக தொட்டியையும் தவற விட்டிருந்தான் . பசி வயிற்றை பதம் பார்க்க ஆரம்பித்தது. என்னடா வாழ்க்கை இது என்று நொந்தான் . சரி கடவுள் நமக்கென்று ஒரு குப்பை தொட்டியை கூடவா ஒதுக்க மாட்டார் என்று  தேட ஆரம்பித்தான் . ஒரு ஐந்து  ரூபாய் இருந்தால் கூட புது இட்லியை ருசி பார்க்கலாம் . அதையும் திருடி, குடித்து, கவுந்து கிடந்தான் அவனது அப்பன் . கல்லை தூக்கி தலையில் போட்டு விடலாம் என்று தோன்றியது . வேண்டாம்  . சிறுவர் ஜெயிலை பற்றி அவனுக்கு இதுவரை வந்த  தகவல்கள் நம்பிக்கை அளிப்பதாக இல்லை . வெறும் சோற்றுக்கு ஆசைப்பட்டு அங்கு போய் குனியவேண்டுமா? சோறு கிடைக்காமலா போய்விடும். அத்தோடு அப்பன் போய்விட்டால்,  பாலத்திற்கு அடியில் இருக்கும் வீடு போய் விடும். பெருசுகளுடன் சண்டை செய்யும் அளவிற்கு தசை இல்லை. அவன் இருந்து தொலையட்டும்.. இந்த யோசனைகள் பசியை அதிகப்படுத்தின.  இதுவரை மூன்று குப்பை தொட்டிகளை பார்த்து விட்டான்.. ஒரு கருமமும் கிடைக்கவில்லை . இந்த காலத்தில் அவரவருக்கு ஒரு  சிக்கல். எப்பொழுதுமே சிக்கல்களுடன் இருக்கும் இவனுக்கு இன்னும் பல சிக்கல் . கல்யாண மண்டபமாகட்டும் , சிறு ஹோட்டல்கள் ஆகட்டும் , அனைத்தையும் மூட வைத்திருந்தது இந்த கொரோனா.  சரி குப்பை தொட்டிகளாவது நன்றாக இருக்கிறதா . கார்ப்பரேஷன் கனவான்கள் , சின்ன குப்பை தொட்டியை எல்லாம் பெரியதாக மாற்றிவிட்டார்கள். அதில் உள்ளே குதிக்காமல் ஒன்றையும் எடுக்க முடியாது. ஒரு முறை இவன் உள்ளிருந்த போது ஒரு வண்டி வந்து தூக்கிவிட்டது. குய்யோ முய்யோ என்று கத்தி தப்பித்தான். வண்டியை ஓட்டி வந்தவன் விட்ட அரையில் மூன்று நாட்கள் குயில் பாட்டு மட்டுமே கேட்டது.  அன்றிலிருந்து ஒன்று தெளிவாகியது . சிமிண்ட்டில் செய்த வட்டமான தொட்டிகளே இவனுக்கு தோது படும் என்று . ஏறி குதிக்க வேண்டாம்.  கைவிட்டு எடுத்து பார்க்கலாம். உள்ளே ஏதும் ஜந்து இருந்தால், குறிபார்த்து கல்லால் அடிக்கலாம். வெளியே நாய் இருந்தாலும் , கால் காததூரத்தில் இருந்தே துரத்தலாம்.  பசி அதிகமாகியது.ஆறு தொட்டிகளை பார்த்து விட்டான். வெறும் பிளாஸ்டிக் குப்பைகளே இருந்தன. வயிறு ரொம்பி இருந்தால், அதை எடுத்துசில காசு தேத்தலாம்.  என்ன பெரிய நகரம். குடிக்க தண்ணீர் கூட இல்லை. குப்பை தொட்டியில் சோறு இல்லை. வீட்டை தட்டி தண்ணீர் கேட்டால் கூட  அடிக்க வருகிறார்கள். எல்லா குப்பை தொட்டிகளையும் நாசப்படுத்தி வைத்திருந்தார்கள் . நாற்றம் பிடித்த மனிதர்கள்.. இவர்களுடன் எல்லாம் வாழ வேண்டுமா?  ஏன் வாழக்கூடாது என்பது போல காட்சி தந்தது அந்த ஏழாவது குப்பை தொட்டி .  இதில் மட்டும் சோறு கிடைத்தது விட்டால், முப்பாத்தம்மன் கோயில் வாசலில் இனி செருப்பு திருடுவதில்லை என்று முடிவெடுத்தான் .தொட்டியை நோக்கி விரைந்தான். ஒரு நாயும் அந்த தொட்டியை சுற்றி வர ஆரம்பித்தது. குப்பை தொட்டிக்கு அருகில் சென்றான், நாய் வல் என்றது. ஓங்கி ஒரு உதை விட்டான். வாலை சுருட்டி ஒதுங்கியது. வலியவனே இங்கு வாழ தகுதியானவன் என்பதை அன்றைய தினமும் உணர்த்தியது.  குப்பை தொட்டியில் மேலே இருக்கும், தெர்மகோலை எடுத்து பார்த்தான். மருத்துவ குப்பைகளாக இருந்தது. அவற்றை  ஒதுக்கினான் . பீசா டப்பா ஒன்று இருந்தது. அவன் கண்களில் ஒளி மின்னியது. ஏதோ ஒரு புண்ணியவானுக்கு பீசாவின் ஓரம் பிடிக்கவில்லை போல. வட்டமாக அதைமட்டும் விட்டு வைத்திருந்தான். எடுத்து உன்ன ஆரம்பித்தான். இதை போன்ற கடினமான சோற்றை உண்ணும் பொழுது நிதானம் முக்கியம் என்பதை அனுபவத்தால் அறிந்திருந்தான். மெதுவாக மென்று தின்றான். இதை மட்டுமே  தின்றால் அடுத்த நாள் காலை சங்கட பட வேண்டும்,  அதனால்  அதை ஓரம் கட்டினான். உள்ளே தோண்டி துழாவ ஆரம்பித்தான். ...
Storytamilதமிழ்

ஐ பி சி – 354 – பாகம் – ஒன்று

இருக்கும் தெம்பை வைத்து ஒரு அரை விட்டான் முகிலன். வாயின் ஓரம் வழிந்து வரும் குருதியை தடவிப்பார்த்தபடியே ,  முகிலனை முறைத்தான், அடிவாங்கிய சுப்பு.  மறுபடியும் ஒரு அரை. ...
Storytamil

கஞ்சன்

பேருந்து நிலையத்தில் உள்நுழைந்த அந்த பேருந்து தனக்கானது  என்று நினைத்த  செல்வமணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது .  இதோ வந்துவிடும் , அதோ வந்துவிடும் என்று மூன்று  மணி நேரமாக ஒரு டீ காபி கூட குடிக்காமல் நின்றிருந்தான் செல்வமணி . மற்றும் ஒரு முறை அருகில் இருந்த டீ கடையின்அருகே சென்று டீ, காபியின் விலையை பார்த்தான் . ஒரு காபிக்கு இவ்வளவு விலையா என்று மனதில் நொந்து கொண்டான் . டீ கடைக்காரர் இவன் அடிக்கடி வருவதும் போவதுமாய் இருந்ததை பார்த்து , முறைக்க ஆரம்பித்தார் .  அப்படியே பார்வையை சுழற்றிய செல்வமணி அங்கு இருந்த  வாலிபர்களை பார்த்தான் , மிக சந்தோஷமாக புகைத்துக் கொண்டிருக்கும் அவர்களை பார்த்து எரிச்சல் வந்தது.  இன்றைய தேதியில் ஒரு சிகரெட் அடிக்க முடிகிறதா  .  ஒரு சிகரெட்டை தனியாக வாங்க முடியாதாம் , முழு டப்பாவும் வாங்க வேண்டுமாம்! , எங்கே போய் கொள்ளை அடிப்பது  .  முன்னொரு காலத்தில் ஒரு சிகரெட் ஒரு ரூபாய் இருந்த பொழுதே , ஒரு நாளைக்கு ஒன்று தான் அடிப்பான் . பின்னர் ஒவ்வொரு வருடத்திற்கும் இவர்கள் விலை ஏற்றி , கடைசியில் வாரத்திற்கு  ஒரு சிகரெட் குடித்து வந்த செல்வமணி அந்த பழக்கத்தை அடியோடு கைவிட்டான். பாக்கெட் நூற்றி இருபது ருபயாம் , எவன் அடிப்பான்  இந்த சிகிரெட்டை.  சரி பீடி இழுக்கலாம் என்றால் வாயெல்லாம் ஒரே நாற்றம் . சுருட்டு கேட்கவேவேண்டாம். இந்த சிகரெட் சிந்தனைகள் மெல்ல மறைய , மதிய பசி எட்டி பார்த்தது . ஒருவழியாக முடிவெடுத்து அந்த கடைக்காரனின் மிக அருகில் சென்று மெதுவாக “அண்ணா அரைகிளாஸ் டீ கிடைக்குமா” என்றான். ஏற இறங்க பார்த்த அந்த டீக்கடைக்காரர் கோப்பையை எடுத்து அதை முழுதும் கழுவாமல் ஏனோதானோவென்று ஊற்றித் தந்தான். மாட்டு மூத்திரம் கூட இன்னும் நன்றாக இருந்திருக்கும் போல, அதை விட கேவலமாக இருந்தது இந்த டீ. டீ தூள் போட சொன்னால் ஆட்டு புழுக்கையை போட்டு வைத்திருப்பான் போல.  கொடுக்கும் ஐந்து ரூபாய்க்கு எவ்வளவு மட்டமான பொருளைதருகிறார்கள்  என்று  அந்த  டீ கடைகாரனை மனதார திட்டிக்கொண்டு  அதை மெல்ல மெல்ல குடித்தான் செல்வமணி. ...
indiamodipoliticsStorytamiltamilanதமிழ்

மீண்டும் தாலிபன் – அட்டகாசமான ஆரம்பம்

பாராவின் ”  மீண்டும் தாலிபன் ” அட்டகாசமாக ஆரம்பித்து விட்டது , இரு அத்தியாயங்களை முடித்தவுடன் இதை பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது . அவ்வளவு...
Storytamil

காடும் பாம்பும்

இது ஒரு சுமாரான கிராமம். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக , அட்டகாசமான ஒரு காடாக இருந்து, இன்று சுமாரான கிராமமாக மாறிய காடு . முதலில் வந்த...
Storytamil

வழுக்கயா ஒரு இளநி

காலை ஆறு மணிக்கே எழும் பழக்கம் கொண்ட சுந்தரம், எழுந்ததும் தலை முடியை  சரி படுத்திகொண்டு தான் அடுத்த வேலைக்கே செல்வார். இதை படித்தவுடன் சுந்தரத்திற்கு எதோ...