சொர்கம்
Post Views: 65 சாவித் துவாரத்தில் கண் வைத்துப் பார்த்தேன் ஒய்யாரப் பூனைகளும் கம்பீர நாய்களும் வனப்பு மிக்க மயில்களும் ஆடித் திரிந்தன கதவை தட்டிப் பார்த்தேன் மனிதர்களுக்கு அனுமதி இல்லை என்று பதில் வந்தது சொத்து சுகம் அனைத்தையும் எடுத்துக்கொள் ஒரு ஓர இடமாவது கொடு என்றேன் உயிரைத் தருவாயா என்றார்கள் ஒரு நொடி யோசித்தேன் துவாரம் மூடப்பட்டது
கிஸ்மு – சனியுடன் ஒரு பயணம்
Post Views: 246 29 ஏப்ரல் 2022 அன்று, சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைந்தார். மேஷ ராசிக்காரர்களுக்கு...
ஆதி புரூஸ் – Why Blood -Same blood
Post Views: 92 ஒரு சில படங்களை மட்டும் பார்த்தே ஆக வேண்டும் எனவும் , எக்காரணம் கொண்டும் பார்த்துவிடக் கூடாது என்றும் மனது சொல்லும் ....
பூக்கள்
Post Views: 82 பிணத்தைக் கொண்ட கூட்டம் பூக்கள் தூவிச் செல்ல மிதிபட்ட பூக்கள் நசுங்க மகரந்தம் கிட்டாத தேனீ பெரும் சாபமிட பல பிணங்கள் விழுந்தன
ஆழம்
Post Views: 113 எவ்வளவு நிரப்பினாலும் ததும்பாமல் விளிம்பில் நின்றபடி தரை தட்டா ஆழத்தை எட்டிபார்ற்கிறது மனது
சர்க்கரையும் மரப் பல்லியும்
Post Views: 238 “அய்யா கிளம்பிட்டாரா”, யாரும் அந்தப் பக்கம் வருகிறார்களா என்று பார்த்தபடியே அதிகாரத்தின் அந்தியில் கேட்டாள் அன்னம்மா. ஓரமாக தரையில் உட்கார்ந்திருந்த சர்க்கரை ,...
குல விளக்கு
Post Views: 160 “கருப்பா இன்னிக்கே எனக்கு சாவ கொடுப்பா” என்று வேண்டிக்கொண்டேன்.நான் பேசுவது யாருக்கும் புரிந்திருக்கவோ கேட்டிருக்கவோ வாய்ப்பில்லை . வார்த்தைகள் கொழ கொழவென வெளியே...
சேயோன்
Post Views: 162 குருதியில் நனைந்த அரிவாளின் கூர் முனைகள் அதையேந்தித் திரியும் முறுக்கு மீசை அரக்கர்கள் பற்றியெரியும் குடிசைகள் ஓலமிட்டபடி வெளிவரும் தீப்பிடித்த மனிதர்கள் பொசுங்கி...
கடவுளின் கூடாரம் காலி
Post Views: 131 மார்கழிக் குளிரிலும் ஐப்பசி மழையிலும் கால் கடுக்க கோவில்களில் நின்றேன் பாசுரம் பாடி பாலாபிஷேகம் செய்து புனுகு சாத்தி அது ஒன்றை...