Uncategorized

தமிழனுக்கு இந்தி தேவையா – பாகம் 1

Post Views: 204  தமிழனுக்கு இந்தி தேவையா? தமிழுக்கு நிகரான ஒரு மொழியே இல்லை என்பது தான் இன்று வரை என்னுடைய கருத்து.  அதே போல மத்த மொழிக்காரர்களுக்கும்...
Uncategorized

நாய் கதை

Post Views: 220 அய்யோ வலி தாங்க முடியலையே என்று மனைவி கதற, அவளை திரும்பி பார்த்தபடியே ஆட்டோவின் வேகத்தை கூட்டினான் கோபி. சதக் என்று ஒரு சத்தம்,...
Uncategorized

திடீர் கவிதைகள்

Post Views: 208 அரை நாள் சோர்வை , ஒரே சிரிப்பில் தகர்த்துவிட்டாள்! கடுங்கோபம் கொண்டு திரியும் என்னை ஒரே முத்தத்தை வைத்து காலி செய்கிறாள்! பாவனைக்காக...
Uncategorized

இந்தியாவும் தாலிபானும்

Post Views: 207 மீண்டும் தாலிபான் ஆட்சிக்கு வந்து இருபது ஆண்டு காலம் பின்னோக்கி சென்றிருக்கிறார்கள்.  இவற்றை பற்றி படிக்க படிக்க, நாம் எவ்வளவு முன்னேறிய நாட்டில்...
Uncategorized

மீண்டும் தாலிபான் மீம்ஸ்

Post Views: 210 “காலை எழுந்தவுடன் படிப்பு,  பின்பு அனைவரையும் சிரிக்க வைக்கும் முயற்சியாக  ஒரு மீமு ” இப்படிதான் என்னுடைய காலை பொழுதுகள் ஆரம்பிக்கின்றன , காரணம் “மீண்டும் தாலிபன் “! அமெரிக்காவில் இருப்பதனால் இப்படி ஒரு சௌகரியம் இருக்கும் என்று நினைத்தே இல்லை . தினமும் காலை 7-8 மணிக்கு “மீண்டும் தாலிபான்” புதிய அத்தியாயம் வந்துவிடும் , படித்த உடனே மீமிற்கான சாராம்சம்  கிடைத்து விடும். ரொம்ப மெனக்கெட தேவையே இல்லை , பாராவே பத்துமீமிற்கான தகவல்களை ஆங்காங்கே  தூவி வைத்திருப்பார் , எடுத்து மீமினுள் சொருகினால் வேலை முடிந்தது!  புக் பேட் நடத்திய அந்த பயிற்சி வகுப்பில் பாரா சொன்னது இதுதான் -“தினமும் எழுதி பழகுங்கள் என்று ” , எழுதுவதற்கு...
Storytamil

கஞ்சன்

Post Views: 199 பேருந்து நிலையத்தில் உள்நுழைந்த அந்த பேருந்து தனக்கானது  என்று நினைத்த  செல்வமணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது .  இதோ வந்துவிடும் , அதோ வந்துவிடும் என்று மூன்று  மணி நேரமாக ஒரு டீ காபி கூட குடிக்காமல் நின்றிருந்தான் செல்வமணி . மற்றும் ஒரு முறை அருகில் இருந்த டீ கடையின்அருகே சென்று டீ, காபியின் விலையை பார்த்தான் . ஒரு காபிக்கு இவ்வளவு விலையா என்று மனதில் நொந்து கொண்டான் . டீ கடைக்காரர் இவன் அடிக்கடி வருவதும் போவதுமாய் இருந்ததை பார்த்து , முறைக்க ஆரம்பித்தார் .  அப்படியே பார்வையை சுழற்றிய செல்வமணி அங்கு இருந்த  வாலிபர்களை பார்த்தான் , மிக சந்தோஷமாக புகைத்துக் கொண்டிருக்கும் அவர்களை பார்த்து எரிச்சல் வந்தது.  இன்றைய தேதியில் ஒரு சிகரெட் அடிக்க முடிகிறதா  .  ஒரு சிகரெட்டை தனியாக வாங்க முடியாதாம் , முழு டப்பாவும் வாங்க வேண்டுமாம்! , எங்கே போய் கொள்ளை அடிப்பது  .  முன்னொரு காலத்தில் ஒரு சிகரெட் ஒரு ரூபாய் இருந்த பொழுதே , ஒரு நாளைக்கு ஒன்று தான் அடிப்பான் . பின்னர் ஒவ்வொரு வருடத்திற்கும் இவர்கள் விலை ஏற்றி , கடைசியில் வாரத்திற்கு  ஒரு சிகரெட் குடித்து வந்த செல்வமணி அந்த பழக்கத்தை அடியோடு கைவிட்டான். பாக்கெட் நூற்றி இருபது ருபயாம் , எவன் அடிப்பான்  இந்த சிகிரெட்டை.  சரி பீடி இழுக்கலாம் என்றால் வாயெல்லாம் ஒரே நாற்றம் . சுருட்டு கேட்கவேவேண்டாம். இந்த சிகரெட் சிந்தனைகள் மெல்ல மறைய , மதிய பசி எட்டி பார்த்தது . ஒருவழியாக முடிவெடுத்து அந்த கடைக்காரனின் மிக அருகில் சென்று மெதுவாக “அண்ணா அரைகிளாஸ் டீ கிடைக்குமா” என்றான். ஏற இறங்க பார்த்த அந்த டீக்கடைக்காரர் கோப்பையை எடுத்து அதை முழுதும் கழுவாமல் ஏனோதானோவென்று ஊற்றித் தந்தான். மாட்டு மூத்திரம் கூட இன்னும் நன்றாக இருந்திருக்கும் போல, அதை விட கேவலமாக இருந்தது இந்த டீ. டீ தூள் போட சொன்னால் ஆட்டு புழுக்கையை போட்டு வைத்திருப்பான் போல.  கொடுக்கும் ஐந்து ரூபாய்க்கு எவ்வளவு மட்டமான பொருளைதருகிறார்கள்  என்று  அந்த ...
Uncategorized

நரகத்தில் ஒரு நிமிடம்

Post Views: 202  பதறியபடியே படுக்கையில் இருந்து எழுந்தான்  முகுந்த். என்ன ஒரு கோரமான கனவு ! அப்பப்பா , நரகத்திற்கு சென்று  வந்ததை  போல இருந்தது . படபடக்கும் நெஞ்சினை ஆசுவாச படுத்த தண்ணீர் பாட்டிலை தேடி எடுத்தால், அதில் தண்ணீருக்கு பதில்  ரத்தம் !  விடுக்கென படுக்கையில் இருந்து எழுந்து முகத்தை துடைக்க கையை தூக்கினால் , கை இல்லை. அவனது தோல் பட்டையில் இருந்து பாம்புகள் நெளிந்தன ! விரல்களுக்கு பதில் புழுக்கள் ! தனக்கெண்ணவோ ஒன்று நடக்கிறது என்று உணர , தொண்டை வறண்டது . இந்த முறை  தண்ணி குடிக்க பிரிட்ஜை  நோக்கி விரைந்தான் . பிரிட்ஜை திறந்தால் ஒரே நாற்றம் , அழுகியநிலையில் சடலங்கள் , அதுவும் ஒவ்வொன்றும் வேறு வயதுடைய சடலங்கள் . . அதில்  சிதலாமடைந்த ஒரு பாட்டியின் சடலம்...