சேயோன் 

குருதியில் நனைந்த

அருவாளின் கூர் முனைகள் 

அதையேந்தித் திரியும் 

முறுக்கு மீசை அரக்கர்கள்

பற்றியெரியும் குடிசைகள் 

ஓலமிட்டபடி வெளிவரும் 

தீப்பிடித்த மனிதர்கள் 

பொசுங்கி நாற்றமெடுத்த 

மயிர்ச் செண்டுகள் 

நாதியற்று கிடக்கும் 

அண்டாக்கள்

இதயம் இரண்டு முறை
விட்டுத் துடிக்க

ஓரக் குடிசையில் 

கைம்பெண் ஒருத்தி 

கருவை கலைக்க

கூரற்ற அருவாளை 

வயிற்றுப் பக்கம் நகர்த்தினாள் 

Leave a Reply

Your email address will not be published.