கவிதைதமிழ்

குற்றமும் தண்டனையும் 

Image by Lina from Pixabay

நடக்க நடக்க 

கால்கள் புதைகின்றன 

உதடு வெடித்து 

நா வறழ்கிறது

சருமம் உதிர்ந்து 

எல்லா தசைகளிலும் 

எரிச்சல் மிஞ்சுகிறது 

பாலைவனமும் 

வட்டமிடும் கழுகும்

ஊர்ந்தோடும் தேளும்

அரக்கு நிறப் பாம்பும் 

என்னை உணவாக்கிட

துடிக்கின்றன 

தொலைதூரக் கானல் நீரில் 

மலிந்து வாழ்ந்த வாழ்க்கையின் 

பாவங்களைக் காண்கிறேன்

Hi, I’m tamilvalai

Leave a Reply