நிழல்
நீர்த்துப்போன மனிதன்
நிழலைக் காணாது கவலையுற்றான்
உன் பாவங்களைக் களைந்து விட்டேன் போ என்றான் சித்தார்த்தன்
நக்கிப் பிழைத்தே வாழ்ந்தவனுக்கும் நஞ்சுள்ளம் கொண்டவனுக்கெல்லாம்
நிழல் தெரிகிறதே
என்றான் மனிதன்
காற்றுக்கும்
நீருக்கும்
நிலவுக்கும்
இரவுக்கும்
மனதிற்கும்
கனவுக்கும்
உறவுக்கும்
நிழலில்லை ,
இனி உனக்கும்தான் என்றான் சித்தார்த்தன்
மனிதன் மறைந்தான் , நிழலற்ற கவலையுடன்.