நிழல்

நீர்த்துப்போன மனிதன் 

நிழலைக் காணாது கவலையுற்றான்


உன் பாவங்களைக் களைந்து விட்டேன் போ என்றான் சித்தார்த்தன் 


நக்கிப் பிழைத்தே வாழ்ந்தவனுக்கும் நஞ்சுள்ளம் கொண்டவனுக்கெல்லாம்

நிழல் தெரிகிறதே 

என்றான் மனிதன் 


காற்றுக்கும் 

நீருக்கும் 

நிலவுக்கும் 

இரவுக்கும்

மனதிற்கும்

கனவுக்கும்

உறவுக்கும்

நிழலில்லை , 

இனி உனக்கும்தான் என்றான் சித்தார்த்தன்  


மனிதன் மறைந்தான் , நிழலற்ற கவலையுடன்.

Hi, I’m tamilvalai

Leave a Reply