கடவுளின் கூடாரம் காலி
மார்கழிக் குளிரிலும் ஐப்பசி மழையிலும் கால் கடுக்க கோவில்களில் நின்றேன் பாசுரம் பாடி பாலாபிஷேகம் செய்து புனுகு சாத்தி அது ஒன்றை மட்டும் கொடுத்துவிடு என்றேன் ...
துயரம்
மானுடத்தின் துயரங்களை எல்லாம் தண்ணுள் விழுங்கி ஏப்பமிட்டு மிச்சமான கடவுளின் தவறுகள் அதன் தொண்டையில் நிற்க பால் வேண்டும் என்றழுததாம் அந்த அனாதைத் குழந்தை Views: 138
விசனம்
சலனத்தில் உடைந்த கண்ணாடியின் சில்லுகளில் செய்யமறுத்த உதவிகளும் செய்த துரோகங்களும் கோரப் பிசாசாக மாறி என்னை துரத்த யமனோ ஓர் கூர் சில்லை கையில் திணித்து வேட்டையாடி...
மலம்
தூயமனம் கொண்டவன் குடிப்பதெல்லம் தேனாகும் என்றரியாமல் உயர் சாதியென உறுமி எச்சமாய் வாழ்ந்து ஹரிஜனின் தண்ணிரில் மலக்கரிசலை ஊற்றி கொக்கரித்தாயே உன் மணமல்லவா மலம் Views: 181

அறம்
“அறம்” படித்து விம்மிவரும் அழுகையை அடக்க முயன்று தோற்றதும் மருந்தாக வந்தது குழந்தையின் சிரிப்பு அறம் பெற்றோர் அவ்வோரே Views: 138

குற்றமும் தண்டனையும்
நடக்க நடக்க கால்கள் புதைகின்றன உதடு வெடித்து நா வறழ்கிறது சருமம் உதிர்ந்து எல்லா தசைகளிலும் எரிச்சல் மிஞ்சுகிறது பாலைவனமும் வட்டமிடும் கழுகும் ஊர்ந்தோடும் தேளும் அரக்கு...
அவன் எனும் நான்
அவன் விதைத்த நெல்லையுண்டு அவன் செய்த கட்டிலில் புணர்ந்து அவனிட்ட சாலையில் நடந்து அவன் நெய்த உடைகலனிந்து சீரும் சிறப்புமாக வாழ்ந்து விட்டு அவனை மட்டும் வேண்டாமமென்பதும்...
டயப்பர்
மீ அன்பே உன்னை காரணமில்லாமல் காதலிக்க காரணமின்மையே ஒரு காரணம் ஆகி விடாதா பத்தினி செருப்பு பிஞ்சிடும்- போய் டயப்பர் மாத்து மொதல்ல Views: 105
ஆண் பால்
பசியால் கண் திறக்காமல்தன் மொழியில் விம்மியதுகைக்குழந்தை அப்பனும் ,ஆட்டிப் பார்த்தான்பாடிப் பார்த்தான்ஆடிக் கூடப் பார்த்தான் உன்னை யார் வரச் சொன்னதுநீ வேண்டாம் போகுழந்தை பீறிட்டது தலை குனிந்துஅம்மாவிடம்...
ஆண்டி (Not aunty 😝)
ஆண்டி ஒரு ஊரில் ஒரு ஆண்டி(aunty அல்ல ) இருந்தானாம் அவன் முன் ஒரு தேவதை தோன்றி உனக்கு என்ன வேண்டுமோ கேட்டுக் கொள் என்றாலாம் நான் இந்த தேசத்தின் ராஜா ஆக வேண்டும் என்றான் அந்த ஆண்டி ஆகட்டும் என்று மறைந்தால் தேவதை அந்தப் புறத்திலும் அறுசுவை உணவிலும் திளைத்த ராஜாவிற்கு ஒரு நாள் இந்தஅரசாங்கம் எப்படி நடக்கிறது , எங்கிருந்து பணம் வருகிறது என்ற யோசனை வந்ததாம் மந்திரியை அழைத்து கேட்டானாம் அதற்கு மந்திரி சொன்னானாம் அரசே , நாமே ஊர் மக்களிடம் வரிப் பணம் வாங்கித்தான் வண்டி ஒட்டுகிறோம் என்று அப்போது தான் ராஜாவிற்கு உரைத்ததாம் இங்கே எல்லோரும் ஆண்டி தான் என்று ராஜா ஆண்டியாக உணர்ந்தானாம் Views: 143