Day: July 15, 2023

கவிதை

சொர்கம் 

சாவித் துவாரத்தில்  கண் வைத்துப் பார்த்தேன்  ஒய்யாரப் பூனைகளும் கம்பீர நாய்களும்  வனப்பு மிக்க மயில்களும்  ஆடித் திரிந்தன  கதவை தட்டிப் பார்த்தேன் மனிதர்களுக்கு அனுமதி இல்லை என்று பதில் வந்தது  சொத்து சுகம்  அனைத்தையும் எடுத்துக்கொள்  ஒரு ஓர இடமாவது கொடு என்றேன்  உயிரைத் தருவாயா என்றார்கள் ஒரு நொடி யோசித்தேன்  துவாரம் மூடப்பட்டது