Uncategorized

கீரனூர் கோமதியப்பன்

கீரனூர் கிராமத்தில் இருக்கும் அறுபது குடும்பங்களுக்கும் தெரிந்தவர் கோமதியப்பன்உடனே எதோ மிராசுதாரர் என்றோ , பண்ணையார் என்றோ நினைத்துவிட வேண்டாம்அவர் ஒரு பால்காரர்பால் பாக்கெட்டை தூக்கி விட்டெரிந்து செல்லும் இளவட்டம் இல்லைஇருபத்தி மூன்று ஆண்டுகளாக அந்த ஊரில் பிறக்கும் குழந்தை முதல் , கடைசிசொட்டு பால் குடித்து  மண்டையை போடும் கிழம் வரை இவர் கொடுப்பதை தான் குடிக்கவேண்டும் .

தினமும்  காலை நான்கு மணிக்கே எழுந்து , பாலை கறந்து முடித்து விடுவார் . பாலை இரண்டு அலுமினிய கேன்களில் வண்டியில் ஏற்றி ஊரையே வலம் வருவார்டீ கடைகளுக்கு கொடுக்கும் பால்  கேனில் அரை பங்கு  தண்ணீரையும் , மற்றொன்றில் கால் பங்கு   தண்ணீரை கலந்து வீடுகளுக்கும் கொடுப்பார்தாய் பால் குடிக்காத குழந்தைகள் மட்டும்ஸ்பெஷல் , கம்மியான தண்ணீர் கலந்து சப்பளை செய்வார் . ஆறு   

மணிக்கு டீ கடையில் ஆரம்பிக்கும் இந்த பால் சப்பளை , ஒன்பது மணிக்கு முடியும் . முடியும் இடம் முப்பாத்தம்மன் கோவிலாக இருக்கும் . 

ஊரின் நாட்டாமைக்கே ஏழே முக்காலுக்கு தான் பால் கிடைத்து , காபி கிடைக்கும் . 

ஊரின் அத்துணை விசேஷங்களிலும் ஜாதி பார்க்காமல் அழைக்கப்படும் ஒரே ஆளாக கோமதியப்பன் தான் இருப்பார் . புகையிலை போடுவாரே தவிர ,   சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வேறு எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் .   அதிகமாக பேச மாட்டார் , வீண் வம்புக்கு போக மாட்டார் , புறன் பேச மாட்டார்ஒவ்வொரு வீட்டுவாசலுக்கும் வந்து இரு முறை பெல் அடிப்பார்,ஆள் வரவில்லை என்றால்  அடுத்த வீடு . கடைசியாக விடுபட்ட வீடுகளுக்கு ஒரு முறை கண்டிப்பாக சென்று விட்டே வீடு திரும்புவார்மாதம் ஆறு தேதி கடந்து விட்டால் , காசு வசூலிக்க ஆரம்பிப்பார் . எப்படியும் இருபது தேதிக்குள் வசூலித்து முடிப்பார்

அன்றும் அப்படிதான் ஆரம்பித்தார் . காலை நாலு மணிக்கு இருக்கும் ஆறு கன்றுக்குட்டிகளையும் அவிழ்த்து விட்டு பால் குடிக்க விட்டார் . ஐந்து நிமிடத்தில் வாயில் புகையிலையை போட்டு ,பால் கறக்க ஆரம்பித்தார்.. பால் கறந்து முடித்து அனைவருக்கும் சப்பளை செய்து முடித்தார் . 

அன்று இரவு பால் குடித்து முடித்த  ஒருவருக்கு மூச்சு திணறல் வந்தது . இந்த செய்தி  தீயாக பரவ ஆரம்பித்ததுஅடுத்த நாள் நாலு பேருக்கு வயிற்று போக்கு மற்றும் இருமல் வந்தது . டாக்டரே இல்லாத அந்த கிராமத்தில் இருந்த அனைவரும் இவரது பாலால் தான் பிரச்சனையோ என்று பேச ஆரம்பித்தனர் . மூச்சு திணறல் வந்த அந்த பெருசு மண்டையை போட்டதுஅன்றில் இருந்து மூன்றாவது நாளில் மேலும் ஒருவர்  இறக்க , பழியெல்லாம் கோமதியப்பனின் மேல் விழுந்தது . முற்றிலும் பால் வாங்குவதையே தவிர்த்து விட்டனர்அந்த ஊர் மக்கள்

கோமதியப்பணுக்கு அழுகையே வந்து விட்டது . எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் அந்த ஊர் மக்கள் கேட்கவேயில்லை. இவரிடம் பேச்சு கொடுக்கவே மறுத்தனர் . விரக்தியின் உச்சிக்கே சென்றார்.

ஒரு வாரம் கழித்து அந்த கிராமத்திற்கு வந்த அரசாங்க டாக்டர் , டோமினோ என்னும் கொடிய நோய் ஒன்று பரவ ஆரம்பித்து இருப்பதாகவும் , அது ஐக்கிய அரபு நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது என்று சொல்லிபோன வாரம் அங்கிருந்து வந்த இருவரின் வீட்டிற்க்கு சீல் வைத்து சென்றார் .

தவறை உணர்ந்த அந்த ஊர் மக்கள் எவ்வளவோ கெஞ்சியும் கேட்காமல் , கோமதியப்பன் அவரது ஐம்பத்திமூன்றாம் வயதில் அந்த கிராமத்தை விட்டு வெளியேறினார் . 


கடந்த சில வருடங்களாக சென்னையில் ஆவின் பூத் ஒன்றை சந்தோசமாக நிர்வகித்து வருகிறார் .

Hi, I’m valaithinni

Leave a Reply