Day: August 23, 2021

Uncategorized

நரகத்தில் ஒரு நிமிடம்

 பதறியபடியே படுக்கையில் இருந்து எழுந்தான்  முகுந்த். என்ன ஒரு கோரமான கனவு ! அப்பப்பா , நரகத்திற்கு சென்று  வந்ததை  போல இருந்தது . படபடக்கும் நெஞ்சினை ஆசுவாச படுத்த தண்ணீர் பாட்டிலை தேடி எடுத்தால், அதில் தண்ணீருக்கு பதில்  ரத்தம் !  விடுக்கென படுக்கையில் இருந்து எழுந்து முகத்தை துடைக்க கையை தூக்கினால் , கை இல்லை. அவனது தோல் பட்டையில் இருந்து பாம்புகள் நெளிந்தன ! விரல்களுக்கு பதில் புழுக்கள் ! தனக்கெண்ணவோ ஒன்று நடக்கிறது என்று உணர , தொண்டை வறண்டது . இந்த முறை  தண்ணி குடிக்க பிரிட்ஜை  நோக்கி விரைந்தான் . பிரிட்ஜை திறந்தால் ஒரே நாற்றம் , அழுகியநிலையில் சடலங்கள் , அதுவும் ஒவ்வொன்றும் வேறு வயதுடைய சடலங்கள் . . அதில்  சிதலாமடைந்த ஒரு பாட்டியின் சடலம் வாயை பிளந்தபடி முறைத்தது...